கொரோனாவில் இருந்து தப்பிக் கொள்வதற்கு ஆவி பிடிப்பது சரியா.? இதனால் என்ன என்ன ஆபத்து ஏற்படும்? ஆவி பிடிக்கும் முறை இதோ உங்களுக்காக..!!
கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கு ஆவி பிடிக்க வேண்டும் என அண்மை காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதனை சிலர் பின் பற்றியும் வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆவி பிடிப்பது நல்ல விடயமாகும். வெளியே சென்று வந்தால் குளித்துவிட்டு சுடு நீர் ஆவி பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், சளி இருமல் போன்றவற்றிற்கும் நல்லதே.
அதே போல் இன்றைய சூழ் நிலையில் ஆவி பிடிப்பது மக்களிற்கு புத்துணர்வை தரக்கூடியது. ஆனால் இதனால் கொரோனா வைரஸ் குணமாகுமா? கொரோனா வைரஸ் அழிந்து விடுமா என கேட்டால் இல்லை தான். உண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்கள் சுடு நீரில் ஆவி பிடிக்கக் கூடாது. இதனால் நுரையீரல் இன்னும் பாதிப்படையலாம்.
சாதாரண நேரத்தில் ஆவி பிடித்து நீங்கள் உள் இழுக்கும் சூட்டை நுரையீரல் தாங்கிக் கொண்டாலும் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் போது நீங்கள் உள் இழுக்கும் சூட்டை நுரையீரல் தாங்காது, இதனால் பாதிப்புகள் ஏற்படும். முகத்திற்கு சாதாரணமாக ஆவி பிடிக்கலாம் ஆனால் சூட்டை உள்ளே இழுக்க கூடாது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப் படாவிட்டால் சளி,இருமல், போன்றவற்றால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் ஆவி பிடித்து உள் இழுக்கலாம்.
இதனால் சுவாசப் பாதை நல்ல நிலைக்கு திரும்பும். சளி இருமல் கூட குணமாகும்..இன்றைய நாட்களில் காய்ச்சல், இருமல், இருந்தால் ஆவி பிடிப்பதோடு நிறுத்திவிட்டு வைத்தியசாலை செல்லுங்கள். பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதியானால் அதன் பின் ஆவி பிடித்து மூச்சு எடுக்கலாம்.. இதனை தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!!