2582 பேரை கொன்று குவித்த கொரோனா இந்தியா & இலங்கையை தாக்கும் அபாயம்..!காய்ச்சல் இல்லாமல் இந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்…,!!
சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் மர்ம காச்சலால் பாதிக்கப் பட்ட 5 நபர்களில் இருந்து கண்டுபிடிக்கப் கொரோனா வைரஸ் இன்று வரை சுமார் 2582 பேரின் உயிரை பறித்துள்ளது. அத்துடன் சுமார் 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மற்றும் சிலர் குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சீன அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. மக்கள் மீது அரசு அக்கறை கொள்ளவில்லை என்ற நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கைக்கு அடுத்து பரவலாம் என கூறப் படுகின்றது. ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்கள் குணடைந்த நிலையில் பல நாடுகளில் தற்போது பரவி வருகின்றது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக குறப்படுகின்றது. பொது இடங்களுக்கு சென்று வந்தால் உடனடியாக குளியுங்கள், உணவு எடுத்துங்க் கொள்ளும் அனைத்து நேரத்திலும் நன்றாக கைகளை கழுவுங்கள்.
அடுத்து இருமல், தொண்டை வலி, நெஞ்சு வலி, மூச்சித் திணறல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சாலை செல்லுங்கள் காய்ச்சல் இல்லாமலும் கொரோனா வரலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்..!!