கொரோனா வைரஸைக் காவி வருகிறார்களா? கண்டுபிடிக்க நடவடிக்கை!
தற்போது உலகளவில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ள கொரோனா வைரசால் பல்வேறு நாடுகளில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் மத்தியில் பெரும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விமான நிலையத்தினூடாக வருவோர் – செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் மூகக்கவசம் அணிந்தவாறே வருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீனாவிலிருந்து இலங்கை வருவோரைச் சோதனை செய்ய விசேட பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம், குறித்தி பயணிகளின் உடல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மாற்றங்களால் பீதி ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.