திடீரெனப் பரவியது காட்டுத் தீ! 7 பேர் உயிரிழப்பு!
திடீர் காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள பரிதாபச் சம்பவமானது கிரீசில் இடம்பெற்றுள்ளது. இது திடீரென இடம்பெற்ற சம்பவம் எனவும் பல உடமைகளுக்கும் இதனால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிரீஸ் நாட்டினுடைய தலைநகரான ஏதென்சின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதில் திடீர் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் காட்டு தீ மரங்கள் இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளித்துள்ளது.
காட்டுப்பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தில் அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் சிக்கினர். இதில், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 56-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும் கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கொடுர இயற்கை விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-இற்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.