ஒட்டுமொத்த நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவும்..! பீதியை கிளப்பி உள்ள வைத்தியர்கள்..! தொடரும் மரணங்கள்..!
கடந்த வருடம் சீனாவில் ஆரம்பித்து உலகையே ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் விடயம் கொரோனா வைரஸ் தான். சாதாரணமாக ஆரம்பித்து சுமார் 2 ஆயிரத்திற்கு மேட்பட்ட மக்களை மரணத்தை தழுவ வைத்துள்ளது. அத்துடன் 70 ஆயிரத்திற்கு அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப் பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த நிலையில் சீனா வைத்தியர்கள் உலகமே அதிர்ந்து போகும் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில் கொரோனா வைரஸின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து சுமார் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பரவக் கூடியதாக இருக்கிறது. இது வரை இதனை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை, கட்டுப் படுத்த மட்டுமே முடிகிறது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள தயங்குகின்றனர்.
இதனால் அவர்கள் நோயினை பரப்புகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப் படுத்துவதை விட்டு விட்டு அழிப்பதை முயற்சிக்க வேண்டும். இதற்க்கான மருந்தை உடனடியாக கண்டு பிடிக்கா விட்டால் சீனாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இது பரவும். இதனால் உலகில் சுமார் 60% மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகலாம்.
இதனால் இந்த வைரஸுக்கு மருந்து கண்டு பிடிப்பது அவசியமாகிறது என தெரிவித்துள்ளனர். சீனா வைத்தியர்களின் இந்த எச்சரிக்கையை அனைத்து வைத்தியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப் படுத்தமட்டும் இல்லாமல் அழிக்கவும் மருந்து தேட ஆரம்பித்துள்ளனர்.