படக்குழுவினரின் கேலி கிண்டல் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத தனுஷ்.! வீடியோவை பார்த்து சோகமான ரசிகர்கள். வைரலாகும் வீடியோ இதோ!!
இவன் எல்லாம் நடிகரா என கேவலப் படுத்தியதால் கேரவனில் போய் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, தனுஷ், சதீஷ், அனிருத் ஆகியோர் இருந்து பேசிக்கொண்டிருந்த போது தனுஷிடன் அவரது ஆரம்ப காலம் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அதன் போது “காதல் கொண்டேன்” திரைப்படம் நடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர் திரைப்படத்தின் ஹீரோ யார் என்று தனுஷிடம் கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் இரண்டாவது ஹீரோவானா சுதீப்பை காட்ட குறித்த நபரும் மகிழ்ச்சியுடன் சுதீப்புடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் சென்றதும் படக்குழுவினர் மூலம் தனுஷ் தான் ஹீரோ என தெரிந்ததும் இவர் ரிக்ஷா ஹீரோ ஆட்டோ ஹீரோ என கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஒட்டுமொத்த செட்டும் கிண்டல் செய்ததுடன் தனுஷை ஆட்டோ ஹீரோ என கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன தனுஷ் கேரவனுக்குள் சென்று கதறி அழுததுடன் தனது தந்தை மீது கோபப் பட்டுள்ளார். அப்போது 18 வயது என்பதால் கேலி கிண்டல்களை எதிர்கொள்ள முடியவில்லை என அவரே கூறியுள்ளார். விஜய் சேதுபதி, சதீஸ் ஆகியோர் பின்னர் ஆறுதல் கூறியுள்ளனர்.!