பிரபல தொலைகாட்சியில் “நீதானே என் பொன்வசந்தம்” சீரியலில் நடிக்கும் அனுவின் நிஜ தொழில் என்ன தெரியுமா.? இதோ வைரலாகும் அழகிய புகைப்படங்கள்.!
பிரபல தொலைகாட்சி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற சீரியல் “நீ தானே என் பொன் வசந்தம்” 40 வயதான நபருக்கும் 20 வயது யுவதிக்கும் இடையில் உருவாகும் காதலும், அந்த காதலுக்கு வரும் பிரச்சனைகள், காதல் வருவதற்கான காரணம் என ஒவ்வொரு காட்சியையும் அத்தனை அழகாக அமைத்து ரசிக்கும் படி கொடுக்கிறது “நீதானே என் பொன் வசந்தம்” சீரியல் குழு.
இதனால் தானே என்னவோ சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றது, இந்த சீரியலின் நாயகியாக நடிப்பவர் தர்ஷனா. அப்பாவியான முகம் அனைவரையும் ஈர்த்து விடும் அழகு என அசத்திக் கொண்டிருக்கின்றார். சீரியலில் அனு என்ற கதாபாத்திரம் என்பதால் தர்ஷனா என்ற அவரது பெயர் பலருக்கு மறந்து போய் விட்டது, உண்மையில் தர்ஷனா யார் என்று கேட்டால் அவர் ஒரு டாக்டர்.
குன்னூரில் பிறந்த தர்ஷனா நம்ம தமிழ் பொண்ணு. இவரது தந்தை அஷோக் ஒரு டாக்டர். அவர் தனது மகளான தர்ஷனாவை டாக்டராக்க விரும்பினார். ஆனால் தர்ஷனாவோ நடிகையாக விரும்பினார். டாக்டரானால் சினிமாவில் நடிக்க அனுமதிப்பதாக அசோக் கூற மிகவும் கஷ்டப் பட்டு படித்து, சிறந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பை முடித்தார்.
அதன் பின் தந்தையின் அனுமதியுடன் போட்டோ ஷூட் நடத்திய தர்ஷனாவிற்கு கிடைத்த முதல் சீரியல் நீ தானே என் பொன் வசந்தம் தான். தற்போது பல வாய்ப்புகள் கிடைத்தாலும் முதலில் ஒரு சீரியல் முடியட்டும் என இருக்கின்றாராம்! சின்ன பெண் போல் இருக்கும் இவர் டாக்டரா என பலரும் கேட்டு வருகின்றனர்.!!