தற்கொலை தாக்குல்தாரி இன்ஷாஹ் இப்ராஹீம் வீட்டில் கிடைத்த பொருட்களின் வியக்க வைக்கும் பெறுமதி.!
இலங்கையின் வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கறுப்பு அடையாளமாக கடந்த 21ம் திகதி அமைந்தது. பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து ஐ எஸ் தீவிர வாதிகளால் கொடூர தாக்குதல் இடம் பெற்றது. இதில் ஏராளமான உள் நாட்டு வெளி நாட்டு மக்கள் பலியானார்கள். இதில் இரண்டு நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் இல்ஹாம் இப்ராஹீம் மற்றும் இன்ஹாம் இப்ராஹீம்.
இருவரும் இலங்கையின் பிரபல வர்த்தகரின் மகன்கள். இவர்களை தெமட்டகொடை பகுதியில் வசித்து வந்த நிலையில் இருவரும் இரண்டு ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இவரது மனைவி வீட்டில் தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதனை தொடர்ந்து பொலீசார் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் வீட்டை இன்று சோதனை இட்டுள்ளனர்.
இங்கு 30 மில்லியன் மற்றும் 15 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்கள்,5லட்சம் ரூபாய் பெறுமதியான வெளி நாட்டுப் பணம் மற்றும் 1 1/2கோடி ரூபாய் இலங்கை பணம், மற்றும் ஏராளமான நகைகளை பொலீஸார் கைப்பற்றி உள்ளனர்.இது தொடர்பாக மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”