மரணம் வரை அழைத்துச் செல்லும் மனச்சோர்வு ( Depression ) நீங்க…இது மட்டும் தான் நல்ல தீர்வு..! மரணங்களை தடுக்க அதிகம் பகிருங்கள்..!!
மனச்சோர்வு என்பது ஏதோ பெண்கள் சம்மந்தப்பட்டது என்ற கருத்து, சமூகத்தில் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தனக்கு பெண்மைச் சாயல் பூசப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ஆண்கள் எனக்கென்ன…? நான் நல்லாதான் இருக்கேன். என்று கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் அதேசமயம் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பதும், மறுப்பதும் சிலசமயம் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம்.
தீவிர மனச்சோர்வு கொண்ட ஆண்கள் பெண்களை விட அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது. ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகம் பெண்கள்தான். வெற்றி வாய்ப்பில் ஆண்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.
முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் அதாவது உங்களால் கட்டுப்படுத்த இயலாதவை, உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.
உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு திசையில் உங்கள் இருக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷயங்கள்கூட இதில் உதவலாம்.
மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்துவிடும். அப்படியும் மனச்சோர்வு தொடருகிறது என்றால் தயங்காமல் மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர்களின் சிகிச்சைக்கு உடன்படுங்கள்.அல்லது,
காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும்.
இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகியவை அவசியம்.யோகா, தியானம், உணவில் கட்டுப்பாடு புகை, மது கூடாது, நிம்மதியான தூக்கம்,வேலையில் அக்கறை, போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல், சமுதாயத்தோடு ஒத்துப்போதல். இவைகளைக் கடைப்பிடித்தால் மனச் சோர்விலிருந்து 100 வீதம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.