இந்தியாவில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு டிக் டாக் வீடியோவால் வந்த வினை..!!
இந்தியா டிக் டாக் வீடியோவுக்கு பேர் போன இடமாக விளங்குகின்றது. மேலும் இந்த டிக் டாக் ஆசை யாரை விட்டது. சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை டிக் டாக் வீடியோவுக்கு அடிமையாக விடுகின்றது.
இந்தியாவின் குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் பொலிஸ் நிலையத்தில் வேலை செய்யும் பெண் பொலிஸ் அதிகாரி அர்பிதா சௌத்ரி என்பவர் தனது வேலை நேரத்தில் அடிக்கடி டிக் டாக் விடியோவை பார்த்துக் கொண்டிருப்பதாக உள்ளார். அவரது முழுக் கவனத்தையும் அந்த வீடியோ பார்ப்பதிலையே குறியாக இருந்து வந்தார்.
மேலும் இந்த நிலையில் டிக் டாக் வீடியோ செய்ய வேண்டும் என்று விரும்பிய அந்த பெண் பொலிஸார் பொலிஸ் நிலைய லாக்-அப் அருகே நின்று, சீருடை இல்லாமல் சாதாரண உடையில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி இந்த வீடியோவை அவர் டிக் டாக் செயலியில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இணையத்தில் தீயாய் வைரலானது. அதன் பின்னர், காவல் நிலையத்திற்குள் இப்படி பொலிஸ் ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளலாமா? என கண்டனங்கள் எழுந்துள்ளது.
இதனை அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், குறித்த பெண் பொலிஸ் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அத்துடன் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா தெரிவிக்கையில், ‘வேலை நேரத்தில் பொலிஸ் சீருடையில் இல்லாமல் இருந்திருக்கிறார். அதோடு, காவல் நிலையத்திற்குள் வீடியோ எடுத்திருக்கிறார். பொலிசாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மீறியுள்ளார். அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’எனவும் கூறியுள்ளார்.
Lady police constable in Mahesana district of North Gujarat faces disciplinary action after her TikTok video shot in police station goes viral pic.twitter.com/7NWXpXCh8r
— DeshGujarat (@DeshGujarat) 24 July 2019
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.