யோகா செய்ய வேண்டுமா???
யோகா ஒரு ஆரோக்கியமான ஒழுக்கம். இறை சக்தியை உணர்வது போன்ற உடற்பயிற்சி. இதை செய்வதால் உடல் கட்டமைப்பாகவும் ஆரோக்கியம், அமைதியான மனநிலையையும் பெறலாம்.
மூளைக்கு சீரான இரத்தம் ஓட்டம் செல்வதற்கு யோகா செய்ய வேண்டும். புத்திணர்ச்சியாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் இதை செய்யலாம் இதனால் சோர்வு, டென்ஷன் அன்றி இருக்கலாம். இது நரம்புகள் , செரிமானங்களை சீர் செய்கிறது. அப்படி செய்வதெனின் மருத்தவ ஆலோசனை பெறவும்.
யோகா செய்வதால் சுவாசக் கோளறுகளை சீர்செய்வது மட்டுமல்லாமல், மூளை சம்மந்தமான நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். திறன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
மன அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாக யோகா செய்ய வேண்டும்
தொப்பை குறைக்க முயற்சி செய்பவர்கள் யோகா செய்யலாம். இதற்கு தினமும் நவுக்காசனா, உஷத்ராசனா, போன்றதை செ;தால் தொப்பையில்லாமல், இருக்கலாம்.
முதுகுவலி, உடல் தளர்வடைந்து இருப்பவர்கள் செய்யலாம். இந்த யோகா முதுமையிலும் இளமையாக வாழவைக்கும்.
சீரான சுவாசத்தை பெற மூச்சுப்பயிற்சி செய்யவேண்டும். இதை ஆழமாக செய்தால், மன அழுத்தம் போய்விடும்.
ஒரே இடத்தில் இருப்பவர்கள் தினமும் யோகா செய்யவேண்டும். அப்போது முதுகுத் தண்டு சீராக இருக்கும்.
இதய நோய், இரத்த அடைப்பு உள்ளவர்கள் யோகா செய்வதால் ஆரோக்கியத்தை பெறமுடியும்.