ஆபத்தில் இருந்த நோயாளி…அதிரடியாய் செயற்பட்ட ஜூனியர் டாக்டர் பவாஸ். குவியும் வாழ்த்துகள்…!!
விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த நபருக்கு இரத்தமும் கொடுத்து சத்திர சிகிச்சையும் செய்த ஜூனியர் டாக்டர் பவாஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் ஜூனியர் டாக்டராக பணி புரிந்து வருபவர் டாக்டர் பவாஸ்.
சம்பவ தினத்தன்று விபத்துக்குள்ளான இளைஞர் ஒருவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்த போது அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சத்திர சிகிச்சை குழுவில் பவாஸும் இருந்துள்ள நிலையில், விபத்தில் அதிக இரத்தம் போய்விட்டதால் உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவ மனையில் குறித்த வகை இரத்தம் இருக்கவில்லை. பல இடங்களில் மற்றும் பவாஸின் நண்பர்களிடம் முயற்சி செய்தும் இரத்தம் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் திகைத்து நின்ற போது தானே இரத்தம் கொடுத்து சத்திர சிகிச்சையும் செய்ய பவாஸ் முன் வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான இளைஞனுக்கு பவாஸின் இரத்தம் ஏற்றப் பட்டதுடன் சத்திர சிகிச்சையும் முடிந்தது. இந்த விடயத்தை பவாஸின் நண்பர்கள் பெற்றோர் ஆகியோர் பகிர்ந்ததுடன் பாவாஸுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்..!!