மருத்துவரின் மரணத்தை தொடர்ந்து அதிகரித்துள்ள மரணத்தின் எண்ணிக்கை.! கொரோனா தாக்கத்தால் 28 ஆயிரம் பேர் மரணமா.!?
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இது வரை சீனா அரசு வெளியிட்ட தகவலின் படி 650 பேர் வரை மரணமடைந்துள்ளதாகவும் 30000 பேர் வரை பாதிக்கப் பட்டதாகவும் உறுதியாகி உள்ளது. ஆனால் 28 ஆயிரம் பேர் வரை மரணமடைந்திருப்பதாகவும் லட்சத்திற்கு மேட்பட்டவர்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம் எனவும் சீனா மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸை கண்டுபிடித்ததுடன் அதற்கான சிகிச்சையையும் இரவு பகலாக மக்களுக்கு அளித்து வந்த டாக்டர் லீ கொரோனா வைரஸின் தாக்கத்தால் நேற்றைய தினம் மரணமடைந்தார். இதனை சீனா மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் மக்கள் வீதிக்கு இறங்கி உள்ளனர்.
சீனா அரசு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் வைரஸினை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பாக ஹொங்கொங் வெளியிட்டுள்ள தகவலின் படி உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் சீனா கொரோனா வைரஸை கட்டுப் படுத்த முயற்சிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் லட்ச கணக்கில் மரணங்கள் நிகழும் என்பதில் சந்தேகமில்லை, எனவும் இது வரை சுமார் 20 ஆயிரத்திற்கு மேட்பட்டவர்கள் மரணித்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரம் பல நாடுகள் சீனாவை தடை செய்துள்ளது. இதனால் சீனா பயத்தில் இருப்பதால் மரணமடைந்த மக்களின் எண்ணிக்கையை சீனா மறைக்கிறது என மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றது..!!