பைக் பஞ்சரானதால் 26 வயதான பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம்..! பயமாக இருக்கு என தங்கையிடம் கதறிய சோகம்..!!
இந்தியாவில் shamshabadத்தில் இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு நடந்த கொடூர மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான மாதுரி(priyanga shetty) கால் நடை மருத்துவராக பணி புரிந்து வந்துள்ளார். தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரிகள் என்ற சிறிய குடும்பத்தில் பிறந்த மாதுரி தனது மோட்டர் பைக்கில் சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
வழமை போல் நேற்றைய தினம் 7.30 மணியளவில் வேலையை முடித்து விட்டு வந்து பார்த்த போது பைக்கில் காற்று இல்லாமல் இல்லாமல் இருந்துள்ளது. எப்படி போவது என தெரியாமல் யாரிடமாவது உதவி கேட்கலாம் என நினைத்தவருக்கு தானாக ஒருவர் உதவ முன்வந்துள்ளார். குறித்த நபர் பஞ்சர் போட்டுக் கொண்டு வருவதாக பைக்கை எடுத்துச் சென்றுள்ளார்.
அதன் போது தனது தங்கைக்கு கால் செய்த மாதுரி எனது பைக் பஞ்சர் ஆகிவிட்டது.. தானாக முன்வந்து ஒருவர் பஞ்சர் போடுவதற்காக எடுத்து சென்றுள்ளார் என கூறியுள்ளார். ஆனால் போன நபர் சிறிது நேரத்தில் பஞ்சர் போடாமல் திரும்பி வந்துள்ளார். என்ன என கேட்டதற்கு கடைகள் அனைத்தும் மூடிவிட்டார்கள். இந்த பக்கம் ஒரு கடை உள்ளது அது திறந்திருக்கும் வாருங்கள் என அழைத்துள்ளார்.
மாதுரி தனியே நிற்காமல் பஞ்சர் போடுவதற்காக செல்லும் போது மீண்டும் தங்கைக்கு கால் செய்துள்ளார். என்னை பின் தொடர்ந்து சிலர் வருகிறார்கள். அவர்கள் லொரி ட்ரைவர்கள் போல் இருக்கிறார்கள். எனக்கு உதவி செய்யும் நபரும் லொரி ட்ரைவர் போல் இருக்கிறார். பயமா இருக்கு என்னோடு பேசிக்கொண்டிரு என கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் போன் கட் ஆகி உள்ளது.
பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கிடைக்கவில்லை. உடனடியாக குடும்பத்தினர் மற்றும் அயலவரோடு அக்கா கூறிய இடத்திற்கு சென்ற தங்கை தேடி அலைந்துள்ளார். 9.44 மணியளவில் தொலைபேசி ஓப் ஆகி இருந்தது…3 மணி வரை தேடியும் அக்கா கிடைக்காததால் பொலீஸில் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
உடனடியாக பொலீஸார் தேடியதில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைத்துள்ள ஷாத்நகர் பகுதியில் எரிந்த நிலையில் மாதுரியின் சடலம் மீட்கப் பட்டுள்ளது. மாதுரி கூறிய லொரி ட்ரைவர் என்ற வார்த்தையை வைத்து பொலீஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
மாதுரி கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையையில் தெரிய வந்துள்ளது. சில மணி நேரத்திற்குள் யார் இப்படி செய்தது என விசாரணை இடம்பெற்று வருகிறது… எந்த ஆதாரமும் சிக்காததால் இது வரை யாரும் கைது செய்யப் படவில்லை..!!