டாக்டர் ஹரிணியின் மரணம் எப்படி நிகழ்ந்தது!? உண்மையை வெளியிட்ட டாக்டர்கள்!!
அண்மையில் மரணமடைந்த டாக்டர் ஹரிஹரணியின் மரணம் பற்றி பல வதந்திகள் பரவி வந்த நிலையில் மக்களிடம் வதந்திகளை நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மயக்கவியல் கற்று வரும் டாக்டர் ஹரிணி காய்ச்சலால் அவதிபட்ட நிலையில் அவரது கணவரும் டாக்டர் என்பதால் ஹரிணிக்கு காய்ச்சலுக்கு கொடுக்கப் படும் நிவாரணி ஊசி ஏற்றப் பட்டது.
ஊசி போட்டு சில நிமிடங்களில் ஹரிணி மூச்சுத்திணறால் பாதிக்கப் பட்டார். உடனடியாக மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற போது ஹரிணி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஹரிணி ஏற்கனவே போட்டுக் கொண்ட கொரோனா தடுப்பு ஊசியால் தான் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது.
இதனை வைத்தியர்கள் மருத்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு காய்ச்சல் வருவது சாதாரண விடயமாகும். இதனால் அவர் இறக்கவில்லை என்று கூறிய நிலையில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் ஹரிணிக்கு கொரோனா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து வைத்தியர்கள் கூறுகையில் ஹரிணிக்கு கொடுக்கப் பட்ட ஊசி வைத்தியர்களால் தடை செய்யப் பட்ட் ஊசியாகும். குறித்த ஊசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதால் கடந்த மூன்று மாதற்கு முன்பு தடை செய்துவிட்டோம், கணவன் மனைவி இருவருமே டாக்டர்களாக இருந்தும் இதனை செய்துள்ளனர். மக்கள் நோய்கள் வந்தால் மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட பின்னரே சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.!!