தனது மரணத்தை 48 மணி நேரத்திற்கு முன்பு உணர்ந்து பேஸ்புக்கில் பதிவிட்ட பெண் டாக்டர்.!! கொரோனா வைரஸால் இறந்து போன அப்பாவி டாக்டர்.!!
நான் மரணமடையப் போகிறேன் என பேஷ்புக்கில் பதிவிட்ட டாக்டர் ஒருவர் 48 மணி நேரத்தில் மரணமடைந்தது மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மனிஷா யாதவ் என்கிற பெண் டாக்டரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப் பட்ட டாக்டர் மனிஷா யாதவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை இடம்பெற்று வந்த நிலையில் அவரது பேஷ்புக் பக்கத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பதிவிட்டுள்ளார். அதில் இது என் கடைசி காலை வணக்கமாக கூட இருக்கலாம்.
நான் செல்கிறேன், நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள், என் உடல் மட்டும் தான் இங்கிருந்து செல்லும் உயிர் இங்கு தான் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு எதுவும் ஆகாது என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பதிவிட்டு சுமார் 48 மணி நேரத்தில் மனிஷா யாதவ் மரணமடைந்தார்.
கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்த மனிஷாவால் தனது உடல் நிலையை உணர்ந்து கொள்ள முடியுமானதாக இருந்துள்ளது. அதனால் தான் அப்படி பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸை சாதாரணமாக கணக்கிட வேண்டாம் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.!!