மரணம் வரப் போகிறது என்பதை அறிகுறிகளாக காட்டும் கனவுகள்..! இந்த கனவுகள் வந்தால் எச்சரிக்கையாகுங்கள்..!!
கனவுகள் வித்தியாசமானவை கனவுகள் சில விடயத்தை எமது ஆழ்மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் அதே வேளையில் முன்கூட்டி நடக்கப் போகும் சில விடயங்களையும் கனவுகளின் வழி தெரிந்துகொள்ள முடியும் என கூறப்படுகின்றது. சிலர் ஏதேனும் கனவு கண்டால் தாங்கள் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இன்று நாம் பார்க்கப் போவது எந்த எந்த கனவுகள் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றித் தான். பல் விழுவது. பொதுவாக பல் விழுவது போன்ற கனவுகள் வருவது குறைவாகவே இருக்கும். ஆனால் எமது வாயில் உள்ள பல்லு விழுவது போல் கனவு கண்டால் நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது மரணத்தின் அறிகுறிகளில் ஒன்று என சொல்லப் படுகின்றது. அடுத்தது நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்றுவது போல் கனவு வருவது. இப்படியான கனவு கண்டால் கவனமாக இருக்க வேண்டும். இதுவும் ஆபத்தான கனவாகும். அடுத்தது கறுப்பு பூனை, அல்லது கருப்பு மிருகங்கள் கண்டாலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்,
இது மரணத்தை வெளிப்படுத்தும் ஆபத்துகளில் ஒன்றாக இருக்கலாம். இப்படியான கனவுகள் வந்தால் எமக்கோ அல்லது வேறு யாருக்குமோ ஆபத்து ஏற்படலாம். அடுத்தது விறகு. விறகு கட்டுடன் எடுத்து வருவது அல்லது எடுத்துச் செல்வது போல் கனவு கண்டால் இதுவும் ஆபத்து தான்.
இந்த கனவு வந்தால் உங்கள் நெருங்கிய யாராவது மரணமடைய போகின்றார்கள் என்பதை குறிக்கிறதாம்
! என்ன உறவுகளே இந்த தகவல்கள் பயனுள்ளதாக அமைந்ததா அப்படியானால் உங்கள் உறவுகளுடன் பகிருங்கள்..!!