உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தம் புது ஆடையில் கறை பட்டுவிட்டதா.!? அட கவலையை விடுங்க சமையல் அறையில் இருக்கும் இது மட்டும் போதும்…! படித்து பகிருங்கள்…!!
ஆசையாய் வாங்கிய உடைகளின் அழுக்குகளை இலகுவான முறையில் வீட்டிலுள்ள சமையலறைப் பொருட்களைக் கொண்டே சுத்தப்படுத்தலாம் என்பதை அறிவீர்களா? ஆடைகளின் நிறம் மங்காமல் புதுசுபோலவே பயன்படுத்துவதற்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தி பாருங்க.உப்பு:உடைகளை துவைக்கும்போது ஒரு கரண்டி உப்பு சேர்ப்பதால் துணி உலரந்த பின் வண்ணமயமாக வரும். அதுமட்டுமல்லாமல் உப்பில் உள்ள குளோரைட் துணியில் சாயம் போகாமல் தடுக்க உதவும்.
சுடுநீர்:சுடுநீர் அல்லது குளிர்ந்த நீர் காட்டன் துணியில் படிந்த மஞ்சள் நிற கறையை போக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கறையானது நன்கு காய்ந்துவிட்டால், அதனை போக்குவது கடினம். எனவே கறை படிந்த இடத்தில் சுடுநீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ சிறிது நேரம் ஊற வைத்து, பின் சோப்பு பயன்படுத்தி தேய்த்தால், கறைகள் விரைவில் நீங்கிவிடும்.
எலுமிச்சம் பழம்:எலுமிச்சை சாற்றில் சிறிது வினிகரை ஊற்றி கலந்து, அந்த கலவையைக் கொண்டு துணியில் உள்ள கறை படிந்த இடத்தை தேய்த்து, பின் சோப்பு நீரில் ஊற வைத்து துவைத்தால், கறைகள் போய்விடும்.
மிளகு: துவைக்கும் துணிகளுக்கு கொஞ்சம் கருமிளகு சேர்த்து வண்ணங்களைத் தக்கவைக்கலாம். மிளகின் துகள்கள் துணிகளில் ஒட்டிக்கொள்வதை பற்றி கவலை வுண்டாம். அலசும்போது அவை போய்விடும்.
வினாகிரி:வெள்ளை வினிகரைப் பயன்படுத்தி கூட மஞ்சள் நிற குழம்பு கறையை போக்கலாம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை, 1 டேபிள் ஸ்பூன் டிஷ் வாஷ் நீர்மம் மற்றம் 2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, கறை படிந்த துணியை அதில் ஊற வைத்து துவைக்க வேண்டும்.