கோழி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுகிறதா..!? இதோ உண்மை தன்மை உங்களுக்காக…!!
கொரோனா வைரஸின் தாக்கத்தை நினைத்து நாடுகளும் மக்களும் பீதியில் இருக்கும் போது சில விசமிகள் பரப்பும் வதந்திகளானது கண்டிக்கப் பட வேண்டும் என இந்திய் சுகாதார துறை அறிவித்துள்ளது. அண்மையில் இறைச்சி, கோழி , முட்டை போன்றவற்றில் இருந்து கொரொனா வைரஸ் பரவுவதாக செய்திகள் வெளியானது. இதனை நம்பி மக்கள் கோழி, முட்டை போன்றவற்றை சாப்பிடாமல் விட்டனர்.
எந்த ஒரு மாமிசமும் சாப்பிட கூடாது சாப்பிட்டால் கொரோனா பரவும் என வதந்திகள் பரவியதால் கோழி, மற்றும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில் இந்திய கால் நடை துறை, மற்றும் சுகாதார துறை இது தொடர்பான தெளிவு படுத்தலை மக்களுக்கு வழங்கி உள்ளது.
அதில் மக்கள் வீண் பயம் கொள்ள தேவை இல்லை. கோழி மற்றும் முட்டையால் அல்லது உண்ணக் கூடிய மாமிச வகையால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது. எந்த உணவாக இருந்தாலும் கழுவி சுத்தப் படுத்தி சமைத்து சாப்பிட்டால் நிச்சயம் கொரோனா அல்ல வேறு எந்த வைரஸும் தொற்றாது.
இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளனர். முட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.. இனி பொய்யான தகவல் பரப்ப்புவோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்துள்ளனர்..!!