கொரோனாவை தொடர்ந்து வேகமாக பரவும் இன்னும் இரண்டு வைரஸுகள்..! அறிகுறிகள் இது தான்..!!
கொரோனா வைரஸிற்கு இன்னும் முடிவு வராத நிலையில் இன்னும் இரண்டு வைரஸுகளால் ஆபத்து என இலங்கை மக்களுக்கு இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த
சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக கூடி வருகிறது.
இலங்கையில் மார்ச் மாத ஆரம்பத்தில் முதலாவது கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப் பட்டதுடன் ஏப்ரல் 20ம் திகதி வரை 200 க்கும் குறைவான நோயாளிகளே இருந்தனர். ஆனால் திடீரென அதிகரித்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 622.
இந்த நிலையில் எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் இலங்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எலி காய்ச்சல் எலிகளின் சிறுநீர் தண்ணீரில் அல்லது உணவுகளில் கலப்பதால் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன் டெங்கு நுளம்புகளால் பரவுகிறது. எனவே இந்த இரண்டு நோயில் இருந்தும் எச்சரிக்கையாக இருக்கும் படி வைத்தியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் அறிகுறிகள் காய்ச்சல், உடல் வலி, சதை வலி போன்றவையாகும்…!!