இயற்கையாகவே வெள்ளையாக மாற ஆசையா..!? இத செய்து பாருங்கள் போதும்…!!
திருமணம் அல்லது ஏதேனும் விஷேட தினங்கள் என்றால் போதும் பெண்கள் பியூட்டி பார்லர் போக ஆரம்பித்து விடுவார்கள். எல்லோராலும் போக முடியுமா என்ன அவ்வளவு பணம் எல்லாம் எங்களிடம் இல்லை என நினைப்பவர்களுக்கும் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இந்த சூப்பர் அழகு குறிப்பு..! இதற்கு தேவையான பொருட்கள்: ப்ரூ காபி பக்கட், தேன், எலுமிச்சை பாதி. முதலில் முகத்தை பேஷ் வாஷ் அல்லது சோப் பயன் படுத்தி கழுவி முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப்பில் இரண்டு கரண்டி ப்ரூ காபி பவுடரை போடுங்கள், அதில் தேன் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். பேஸ்ட் பதத்தில் தயார் செய்யவும். இப்போது பாதி வெட்டிய எலுமிச்சையை எடுத்து அதன் மீது செய்து வைத்திருக்கும் ப்ரூ காபி கலவையை பூசுங்கள்.
இப்போது முகத்தில் கீழ் இருந்து மேல் நோக்கி எலுமிச்சை பாதியால் மசாஜ் செய்யவும். காபி பேஸ்டில் தொட்டு முகம் முழுவதும் சுமார் ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள், மறக்காமல் கழுத்து பகுதிக்கும் இதனை அப்லே செய்யுங்கள். அதன் பின் 30 நிமிடம் வரை அப்பிடியே விட்டு விடுங்கள்.
அதன் பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். இதனை திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மணமகளுக்கு கூட செய்யலாம். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தாலே இயற்கையான வெள்ளை அழகை நீங்கள் பெறலாம்..!!