ஃபேஸ்புக்கில் மனைவி செய்த செயல்..! கோபத்தில் கணவர் செய்த கொடூரம்..!
அதீத காதல் என்பது ஆபத்தில் முடியும் என்பதை நாம் அறிவோம் அப்படி ஆபத்தில் முடிந்த சம்பவம் ஒன்று இராஜஸ்தானில் இடம்பெற்றுள்ளது. அஜஸ் முகமது கான் இவர் என்பவர் நைனா மங்காளி என்கிற ரேஷ்மாவை காதலித்து வந்தார். இருவரும் தங்கள் காதல் பற்றி இரு வீட்டினரிடம் கூறிய போது இரு வீட்டாரும் சம்மதம் சொல்ல பிரமாண்டமான முறையில் திருமணம் இடம்பெற்றது.
அஜஸ் ரேஷ்மா மீது அதிக அளவான அன்பு வைத்திருந்தார். இந்த அன்பின் காரணமாக ரேஷ்மாவின் அருகில் இருக்க ஆசைப்பட்டார். ஆனால் ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்தார். 5000 நண்பர்கள் 6 ஆயிரம் பாலோவர்ஸ் இருந்தனர். ஃபேஸ்புக்கில் ரேஷ்மா மிகப் பிரபலம். இது பற்றி மனைவியிடம் எடுத்துக் கூறிய அஜஸ் தன்னுடனும் சிறிது நேரம் செலவிடும் படி கேட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சாதாரணமாக சென்றாலும் பின் இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பித்தது. ரேஷ்மா சுமார் 100க்கு மேட்பட்டவர்களுடன் அரட்டை அடிக்க தொடங்கினார். இதனால் கோபப் பட்ட அஜஸ் ரேஷ்மாவை அடிக்க அவர் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின் மனைவியை சமாதானம் செய்த அஜஸ் அவருடன் மகிழ்ச்சியாக வாழ நினைத்தார். ஆனால் ரேஷ்மாவின் மனம் மாறிவிட்டது.
மனைவிக்கு பிடித்த இடங்களை பார்க்க அழைத்து சென்ற அஜஸ் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் டெல்லி ஜெய்பூர் ஹைவேஸ் பகுதியில் வைத்து இருவருக்கும் சண்டை அதிகரித்துள்ளது. ரேஷ்மா விவாகரத்து வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜஸ் ரேஷ்மாவை அடித்து கழுத்தை நெரித்துள்ளார்.
அப்போதும் என்னோடு வாழு என கெஞ்சி உள்ளார். ஆனால் ரேஷ்மாவோ செத்தாலும் உன்னோடு வாழ மாட்டேன் என கூற அருகில் இருந்த கல்லை ரேஷ்மாவின் முகத்தில் போட்டு அஜஸ் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
வீதி ஓரத்தில் சடலம் கிடப்பதை கண்ட சிலர் பொலீஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சடலத்தை மீட்ட பொலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். தான் ரேஷ்மாவை கொலை செய்ததை தனது நண்பருக்கு தெரிவித்த அஜஸ் தலைமறைவாகி உள்ள நிலையில் பொலீஸார் அவரை தேடி வருகின்றனர்..!!