பேஸ்புக்கில் மதபோதகரை காதலித்து திருமணம் செய்த பெண்.!! பலபெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் டாக்டரான மதபோதகருக்கு ஏற்பட்ட நிலை.!!
பேஸ்புக்கில் காதலித்து மதபோதகரை திருமணம் செய்த பெண் ஒருவர் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என பரபரப்பு புகார் கொடுத்துள்ள நிலையில் மதபோதகர் தலைமறைவாகி உள்ள விடயம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் 2010 ஆண்டு மொரிஷியஸ் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு பணிக்கு சென்ற நிலையில் அங்கு சுமார் 8 வருடங்களாக மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மொரிஷியஸ் நாட்டில் இருந்த போது கன்னியாகுமாரி , “திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட்” திருச்சபையின் தலைமை மதபோதகரும் டாக்டருமான ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் என்பவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாற 2018ம் ஆண்டு தமிழ் நாடு வந்தார் ஜான்சி ராணி. இதன் பின்னர் இரு வீட்டினரின் சம்மதத்துடன் தேவாலயத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் 2019ம் ஆண்டு முறைபடி திருமண பதிவும் செய்துகொண்டனர். ஜான்சிக்கும் மதபோதகருக்கும் 2 வயதில் குழந்தை உள்ள நிலையில் திடீரென குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற ஜான்சி ராணி தனது கணவர் பல பெண்களுடன் தகாத முறையில் இருப்பதாகவும் இதற்காக தந்தை வரதட்சனையாக கொடுத்த 20 லட்சம் மற்றும் தனது உழைப்பில் 80 லட்சம், அத்துடன் 40 சவரன் தங்கம் என அனைத்தையும் வாங்கி பெண்களுக்கு கொடுத்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் பொலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றில் மனு தாக்கல் செய்ததுடன் ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் குழந்தை இருப்பதை மத போதகரும் குடும்பத்தினரும் மறைத்து திருமணம் செய்ததுடன் மதபோதகரின் பெண் பழக்கத்திற்கு குடும்பத்தினரும் உதவுவதாக புகாரில் குறிப்பிடப் பட்டிருந்தது.
புகாரை ஆராய்ந்த நீதிபதி உடனடியாக ஜான்சி ராணியின் புகாரை விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மதபோதகர் உட்பட அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். இது குறித்து மதபோதகர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தவறு செய்து விட்டார் என்றும், பெண் ஒருவருடன் பழகிய நிலையில் அவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும்,
அதன் போது எடுக்கப் பட்ட போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து குறித்த பெண் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதால் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளதுடன் தொடர்ந்தும் மிரட்டுவதால் செய்வதறியாது இருப்பதாகவும் மனைவி ஜான்சி ராணியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.!!