பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!!
பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாட்டுகளை விதித்த பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக்கில் இறந்த ஒருவரின் செய்தியை வெளியிட்ட போது அதற்கு கேலி செய்யும் வகையிலோ அல்லது மரணத்தை ஏற்படுத்தும் வகையிலோ கருத்துக்களை பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
இது போன்ற செய்திகளுக்கு ஆரம்பத்தில் பேஸ்புக் எந்த ஒரு கட்டுபாடுகளையும் விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது நிலையை கருத்தில் கொண்டு புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒருவர் இறந்துள்ளார் என்ற பட்ஷத்தில் பதிவு செய்யப்படும் செய்திக்கு தரக்குறைவான கருத்துக்களை பதிவிட்டால் அது தொடர்புடையவர்களின் குடும்ப உறுப்பினர் பேஸ்புக் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்யலாம்.
பேஸ்புக் கணக்கு இருக்கும் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவரின் பேஸ்புக் கணக்கினை Memorialized பக்கத்தில் சேர்க்கும் வசதியையும் பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.