முகத்தை முகப் பருக்கள் அசிங்கப் படுத்துகின்றதா.!? என்ன செய்தாலும் குணமாகவில்லையா.? இதோ முகப் பருக்களை இலகுவாக நீக்கும் முறை..! படித்து அதிகம் பகிருங்கள்…!!
பெண்களுக்கு பெரிய டென்சனாக அமைவது எப்போதும் இந்த முகப் பருக்கள்தான். உடலில் ஏற்படும் ஓமோன் மாற்றங்களால் முகத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அடைக்கப்பட்டு அந்த இடத்தில் பக்டீரியாக்கள் உருவாகும். பின் அந்தப் பக்டீரியா வளர்ந்து முகப்பருக்களாக மாற்றம் பெறும்.
11 வயதில் தொடங்கும் முகப்பருக்கள் 25 வரை நீடித்துக்கொண்டே இருக்கும். ஆண்களுக்கு இன்னும் சில நாட்கள் நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அசுத்தமான கையால் முகப்பருவை தொடும் போது, முகப்பருவில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் முகப்பரு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. முகப்பருவை கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த முகப்பரு மறையும் போது நீங்கா தழும்புகளை விட்டு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
முகப்பரு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முகத்துக்கு அதிகமாக அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை குறைக்கவேண்டும்.எண்ணெய் சார்ந்த கிரீம்களை தவிர்க்க வேண்டும்.கிரீம்களைப் பயன்படுத்தியபின் இரவு வீட்டுக்கு வந்ததும் கழுவிக் கொள்ளுங்கள்.அன்டி பக்டீரியா கொண்ட சோப்ப வகைகளை பயன்படுத்த வேண்டும்.
முகப்பருவிற்கான சிகிச்சைகள் சில, கரும்புள்ளிகள், கட்டிகள் ஆகியவற்றை நீக்க பிரத்தியேக சிகிச்சை முறைகள் உள்ளன.முகப்பருவுக்கு பீல் எனப்படும் சிகிச்சை முறை பின்பற்றப்படுகின்றது.வடுக்கள் உண்டானால் லேசர் சிகிச்சை மூலம் 70 சதவீதம் அவற்றை மறையச் செய்யலாம்.