என் குழந்தை அது இல்லை இது தான், நடிகை பரீனா வெளியிட்ட புகைப்படம்.! சட்ட நடவடிக்கை எடுக்க கூறும் ரசிகர்கள்.!!
இது வரை வெளியான புகைப்படங்கள் எனது குழந்தையுடையது இல்லை, இது தான் என் குழந்தையின் புகைப்படம் எனக் கூறி சீரியல் நடிகை பரீனா தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை பரீனா.
திருமணமான பின்பும் கணவரின் அனுமதியுடன் நடிக்க வந்த பரீனா அண்மையில் கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பமாக இருக்கும் வரை நடித்து வந்த பரீனாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இதனை அவரே தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால் யூடியூப் பக்கத்தில் பரீனாவின் குழந்தை என கூறி வேறு ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். இதனை பார்த்த பரீனாவின் கணவர் இது எங்கள் குழந்தை இல்லை, பொய்யான புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என கூறி இருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பரீனா இது தான் என் குழந்தை.
இன்னும் குட்டிக் குழந்தை, இப்போதே விமர்சிக்காதீர்கள்,பெற்றோருக்கு தங்கள் குழந்தையை மற்றவர்கள் விமர்சிப்பது பிடிக்காது, எந்த குழந்தையையும் விமர்சிக்காதீர்கள் எப தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவிப்பதுடன் குழந்தைகளை வைத்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.!