என் அம்மா, அப்பா, தங்கை, தம்பி அனைவரையும் துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டேன்.! தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞர் செய்த கொடூர செயல்.!!
தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..பங்களாதேஷில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்து குடியேறியவர் பர்ஹான்..தற்போது 19வயதாகும் பர்ஹானிற்கு அம்மா, அப்பா, பாட்டி, அண்ணா தம்பி தங்கை என மிகப் பெரிய குடும்பம் இருந்தது நாடு மாறியதால் நண்பர்கள் இல்லாமல் இருந்த பர்ஹான் மனதளவில் பாதிக்கப் பட்டார்.
இதன் காரணமாக தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த பர்ஹானின் சகோதரர் என்னாலும் இந்த பூமியில் வாழ முடியாது நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என கூற இருவரும் தற்கொலை செய்துகொள்ள திட்டம் போட்டனர். அப்போது தான் குடும்பம் பற்றிய கவலை இவர்களை வாட்டத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து விபரீத முடிவு எடுத்த பர்ஹான் மற்றும் அவரது சகோதரன் இருவரும் துப்பாக்கி வாங்கியதுடன் வீட்டுக்கு வந்து தனது தங்கை, பாட்டி மற்றும் தம்பியை சுட்டுக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் மற்றும் தந்தையை பர்ஹானின் அண்ணன் கொலை செய்துள்ளார். பின்னர் இருவரும் தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்து விடுவேன், நானும் என் அண்ணனும் மிகவும் மன உளைச்சலில் இருந்தோம், அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம், ஆனால் என் குடும்பத்தினர் இதனால் கவலை கொள்வார்கள், அதனால் அவர்களை கொன்றுவிட்டோம் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த அவரது நண்பர்களில் ஒருவர் பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து பர்ஹானின் வீட்டுக்கு சென்ற பொலீஸார் அதிர்ந்துள்ளனர். அத்தனை பேரும் சடலங்களாக மீட்கப் பட்ட நிலையில் பொலீஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.!!