மலேசியா மீன்களுக்கு இப்படி ஒரு நிலையா??
மலேசியா ஆற்றுத் தண்ணீருக்குள் endocrine disrupters (EDCs) எனும் மாசுப்பொருள் கலந்துள்ளதால் ஆறுகளில் உள்ள மீன்களிடையே பாலினப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றனர்.
இந்த மாசுப்பொருள் விலங்குகளிடம் மட்டுமல்லாமல் மனிதர்களிடையேயும் பெரிய அளவிலான சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமெரிக்கச் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. புற்றுநோய் அபாயம், பிள்ளை பெறுவதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை பெரியவர்களிடம் ஏற்படுத்தக்கூடியதாம் EDC. சிறுவர்களிடையே அந்த மாசுப்பொருள் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மருந்துப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே மாசுப்பொருள் தண்ணீரில் கலப்பதற்குக் காரணமாக அமைந்தனர். உற்பத்தி செய்யும் மருந்துகள், முகம் கழுவும் சவுக்காரம் போன்ற மாசுப்பொருள் வெளியாகிறது. சாதாரண மாசுப்பொருள்களைப் போன்றவவை அல்ல EDC மாசுப்பொருள். சுற்றுப்புறத்தில் அதிகரித்து வரும் ரசாயனம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40,000 ரசாயனங்கள் சுற்றுப்புறத்தில் இருந்தாலும் சில நூறு மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.