கணவனுடன் உறவில் இருந்து வீடியோக்கள் வெளியானதால் அதிர்ந்துபோன மனைவி..! வெளியிட்ட மிருகம் இவர் தான்..!
மனைவியுடன் உறவில் இருந்ததை வீடியோ எடுத்து நண்பருக்கு அனுப்பிய கணவரை பொலீஸார் தேடி வருகின்றனர். இது பற்றி தெரிய வருவதாவது.. சென்னையில் பிரபல மருத்துவ நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த செலின் என்ற யுவதிக்கு தன்னுடன் பணி புரிந்து வந்த அருண் என்ற இளைஞருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் செலினுக்கு பெங்களூருக்கு மாற்றம் கிடைக்க தொலைபேசி மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். அதன் பின் உன்னை பார்க்க வேண்டும் பெங்களூர் வருகிறேன் என அருண் கேட்க செலின் சம்மதித்துள்ளார். மார்ச் 17ம் திகதி பெங்களூர் சென்ற அருண் அங்கு ஹோட்டல் அறை ஒன்றை புக் செய்துவிட்டு செலினை அழைத்து சென்றுள்ளார்.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பேசி தன் ஆசைக்கு செலினை பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பின் செலினிடம் இருந்து அருண் விலகியதால் பொலீஸில் செலின் புகார் கொடுத்தார். கைது செய்யப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் செலினை திருமணம் செய்ய சம்மதித்த அருண் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் வேண்டாவெறுப்பாக வாழ்ந்த அருண் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். செலின் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளை போல் இருந்தார். இந்த நிலையில் அவசர மெயில் ஒன்றை அனுப்புவதற்காக அருணின் லாப்டாப் திறந்த செலின் மெயில் அனுப்பிவிட்டு எதேச்சையாக பார்த்த போது அருணின் நண்பருக்கு இவர்களது வீடியோ அனுப்பப் பட்டது தெரிய வந்துள்ளது.
மனைவியுடன் உறவில் இருந்த வீடியோக்கள் சிலவற்றை அருண் தனது நண்பருக்கு மெயில் செய்துள்ளான். இதனை பார்த்த செலின் அருணிடம் சண்டை போட கோபித்துக் கொண்டு புதுக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு செலின் தேடிச் சென்ற போது அருணின் பெற்றோர் செலினை விரட்டியுள்ளனர். இதனால் நேரடியாக பொலீஸ் நிலையம் சென்ற செலின் ஆதாரங்களுடன் புகார் கொடுத்த நிலையில் அருணை பொலீஸார் தேடி வருகின்றனர்..!