உங்கள் பாதங்கள் எப்படி இருக்கிறது.!? ஒரு முறையாவது பார்த்து இருக்கிறீர்களா.? தயவு செய்து பாருங்கள்.. ஏன் தெரியுமா இத படியுங்கள்…!!
காலில் செருப்பு இல்லாமல் நடப்பதை தவிருங்கள். கரடுமுரடான பாதைகளில் உள்ள ஐல்லி கற்கள், உடைந்த கண்ணாடி போன்றன பாதங்களில் எளிதாக காயத்தை ஏற்படுத்தும்.உங்கள் நகங்களை வாரத்திற்கு ஒரு முறை வெட்டி நகங்களின் கீழ்பகுதியில் அழுக்கு அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்;லயென்றால் உங்கள் பாதங்களில் புண் உருவாகக் காரணமாகின்றீர்கள்.நகங்களை வெட்டும் முன் சிறிது தண்ணீரில் கால்களை கழுவி விட்டு சிறிது நேரத்தின் பின் வெட்டும் போது நகங்களில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
உங்கள் பாதங்களின் பின் பகுதியில் புண்கள், கொப்புளங்கள் ஏதும் உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதியுங்கள்.இது வருமுன் காக்கும் முறையாகும்.உங்கள் பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த படுக்கைக்கு செல்ல முன் அல்லது காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் இதமான வெந்நீரில் பாதங்களை கழுவி வந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
பாதங்களில் ஏந்படும் வெப்பத்தைத் தவிர்க்க என்ற ஒருவகை ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை அணிவது சிறந்த ஒரு நல்ல வழியாகும்.பாதங்களுக்கு பராமரிப்பு செய்யும் போது முதலில் நெயில் பொலிஸை அகற்றி, அதன் பின் நகங்களை வெட்ட வேண்டும். பின் வெது வெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்து 10 நிமிடம் ஊங வைக்க வேண்டும். பின் பிரஸ் ஒன்று எடுத்து மென்மையாக தேய்க்க வேண்டும்.
பின் பாதங்களின் அழுக்குகளை அகற்றி பளபளபாக மாற்ற, வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா போட்டு 5 நமிடம் ஊறவைக்க வேண்டும். பின் எலுமிச்சை எடுத்து கால்களை நன்றாக தேய்க்க வேண்டும். இது கால்களை வெண்மையாக்கும். இறுதியாக சோப் போடாமல் குளிர்நத நீரால் கால்களை கழுவ வேண்டும்.