நாம் பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்.? எப்போது சாப்பிட கூடாது..!? இதோ உங்களுக்காக. !!
நாம் பழங்களை எடுத்துக் கொள்ளும் முறையே நோயிலிருந்து பாதுகாக்க வழி. பழங்களை எப்போது எப்படி சாப்பிட தெரியாமலே சாப்பிடுகிறார்கள். பழங்களை சாப்பிட்ட பின் சாப்பிடக்கூடாது.பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி சாப்பிடுவதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
நாம் புட்டு, பாண் சாப்பிடும் போது பழங்கள் சாப்பிடுவதுண்டு. பாண் சாப்பிட்டவுடன் பழத்தை சாப்பிடுவம் அப்படி சாப்பிடக்கூடாது. பழம் உடனே குடலுக்கு செல்லும் அதோடு சேர்ந்து சாப்பிட்ட உணவு குடலுக்கு செல்லாமல் தடுக்கும்.சிலருக்கு வயிறு ஊதுவதற்கு காரணம் சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடுவது. இது வாயுவை உருவாக்கும்.
சிலருக்கு ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம் எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வரும் எப்போது துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது . வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது. இதற்கு காரணம் பழங்களை நாம் சாப்பிடும் தவறான முறை. வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏற்படாது. இல்லையேல் பழத்தை தனி உணவாக சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் பழம் சாப்பிடுவதால் நரை முடி, தலையில் வழுக்கை, கண்களின் கீழ் கருவளைம் தோன்றுவதை தடுக்கும்.பழச்சாறுகளை குடிக்க விரும்பினால், நீங்கள் உடன் பழத்தை வாங்கி பழச்சாறு குடிக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் பழச்சாறு உடலுக்கு கேடு விளைவிக்கும்.
சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் , பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.உடல் உறுப்பு சுத்தமாக இருக்கவும் உடலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் 3நாட்கள் பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.அந்த 3 நாட்களும்இ பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும்.