தேவாலயத்திற்குள் சென்று ஜேசுவை சந்தித்த பிள்ளையார்.! விநாயகர் சதுர்த்தி நாளில் ஸ்பெயின் நாட்டில் நடந்த அற்புதமான சம்பவம். வைரலாகும் வீடியோ!
விநாயகர் சதுர்த்தி அன்று தேவாலயம் சென்று ஜேசுவை விநாயகர் சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகி மகிழ்ச்சியையும் மத ஒற்றுமையையும் காட்டியுள்ளது. ஸ்பெயின் நட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று வழமை போல் குறித்த பகுதியில் இருந்த விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை இடம்பெற்றுள்ளது.
பூஜையின் பின் விநாயகர் நகர்வலம் வரவேண்டும். குறித்த பகுதியில் ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்றனர். அவர்களது பகுதியையும் அங்குள்ள தேவாலயத்தையும் கடந்தே நகர்வலம் வர வேண்டும். அதனால் தேவாலய நிர்வாகத்திடம் பிள்ளையாரை நகர்வலம் எடுத்துச் செல்ல அனுமதி கேட்டுள்ளனர் ஹிந்து மக்கள்.
இதற்கு தேவாலய நிர்வாகம் வைத்த கோரிக்கையில் மன மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் ஹிந்துக்கள். அந்த கோரிக்கை என்ன என்றால் வீதி வலம் வரும் பிள்ளையார் ஜேசுவை சந்திக்க வேண்டும் என்பதாகும். இதனை தொடர்ந்து வீதி உலா வந்த விநாயகர் தேவாலயத்திற்குள் சென்று ஜேசுவை சந்தித்து விட்டு பின் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.!!
In Spain, Indians who organized the Ganesh festival asked the Church if they could take the Ganesh ji from the Church’s way. The church asked them to bring Ganpati Bappa inside the church so that both Gods can meet with each other.
(From a friend in Spain) pic.twitter.com/cub9krjnS3— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) September 8, 2021