வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளை மீட்க போராடும் தாதி தாய்..! கண்ணாடிக்கு வெளியே துடிதுடிக்கும் பெற்ற குழந்தை..! வைரலாகும் வீடியோ..!!
கொரோனா நோயின் தாக்கத்தால் உலகம் முழுவதும் சுமார் 70 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ள அதே வேளை மரணங்கள் சுமார் 2 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் இருந்து மக்களை எப்படி மீட்பது என்பது தொடர்பில் பலரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சீனா மூவாயிரம் ஆண்டு பழமையான மருத்துவத்தின் மூலம் கொரோனாவை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பான செய்திகளை அன்றாடம் நாம் பார்த்து வருகின்றோம். இந்த நிலையில் சீனாவில் தாதியாக பணி புரியும் தன் தாயுடன் சைகை மொழியில் பாடி ஆடி பேசும் சிறுமி ஒருவரின் வீடியோ வெளியாகி பலரது கண்களை குளமாக்கி உள்ளது.
கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தாதிகள் யாரும் வீட்டிற்கு செல்ல முடியாது. வைத்திய சாலையிலேயே இவர்கள் தங்கி இருக்க வேண்டும். சுமார் இரண்டு மாத காலம் மருத்துவ மனையில் கொரோனா வைரஸிக்கு மருத்துவம் பார்க்கும் தன் தாயை காணாது துடித்த சிறுமி ஒருவர்,
கண்ணாடிக்கு உள்ளே உள்ள தன் தாயுடன் கண்ணாடிக்கு வெளியே இருந்து பேசும் வீடியோ வெளியாகி தாதிகள் படும் துன்பத்தை எடுத்துக் காட்டியுள்ளது. நோயாளிகள் போலவே சீனாவில் தாதிகளும் இருக்கின்றனர். இவர்களது உயிர் மீட்கும் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் வேண்டுதலாக இருக்கிறது…!!