குழந்தை அழகாக பிறப்பதற்கு மட்டும் அல்ல இந்த விடயங்களுக்கும் குங்குமப்பூ உதவுகிறது என்றால் நம்புவீர்களா.? இப்படி செய்து குடியுங்கள்.!!
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி குங்குமப்பூவுக்கு உள்ளது. சருமம் ஆரோக்கியமாக இருக்க , குங்குமப்பூவை தினமும் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பொலிவாக இருக்கும். முகம் பொலிவடைய குங்குமப்பூ தைலம் வாங்கி, கொஞ்சம் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழிவினால் முகம் அழகாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை பாலுடன் கலந்து கொடுத்தால், தாய்க்கும், குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இது குழந்தைகளை சிவப்பாக பிறக்க வைக்கும் என்பதையும் தாண்டி, சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.பிரசவ வலி இல்லாமல் இருக்கவும், குழந்தை அழகாகவும் இருக்க கருவுற்று இருக்கும் பெண்கள், வெற்றிலையுடன் குங்குமத்தை கலந்து சாப்பிட வேண்டும்.
நம்முடைய அழகு குங்குமப்பூவில் உள்ளது. குங்குமப்பூவை சாப்பிடுவதால், பெண்களுக்குள்ள மாதவிடாய் வலியை போக்கும்.முகத்தில் படர்ந்துள்ள கருமையை போக்க, குங்குமப்பூவை அரைத்து, அதில் கொஞ்சம் பால் கலந்து, முகத்தில் பூசினால் முகத்தில் உள்ள கருமை மறைவதை உணரலாம்.உதடு சிவப்பாக இருக்க சில குங்குமப்பூவில் சொட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
பின் நிறம் மாறியதும் அதில், சிறிது வெண்ணெய் சேர்த்து குழைத்து, உதட்டில் பூசினால் உதடு சிவப்பாக மாறும். இதனை தினமும் பூச வேண்டும்.வெண்ணெய், குங்குமப்பூ கலந்து உடைந்த நகங்கள், பழுதாகிய நகங்களில் போட்டால் சரியாகி விடும்.