கூகிள் பிளசால் சரிவு கண்ட கூகிள்! 65000 கோடி நஸ்டம்!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமானத் திகழந்துகொண்டிருக்கும் கூகிள் நிறுவனத்தின் சமூக வலைத் தளமான கூகிள் பிளஸ் சேவையானது பயனர்களின் தகவல்களைத் திருடியது என்னும் குற்றச் சாட்டைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட இருப்பதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் தற்போத கூகிளின் சந்தைப் பெறுமதி சரியத் தொடங்கியுள்ளது.
கூகிள் பிளசானது பேஸ்புக்கிற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இதில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளின் காரணமாக பயனர்களின் எண்ணிக்கை குறைந்தது.தற்போது கூகுள் நிறுவனத்தில் இதுவரை இல்லாத அளவில் கூகுள் பிளஸ் தளத்தின் 5 லட்சம் பயனர்களின் விவரங்கள் திருடப்பட்டதை அடுத்து இந்தத் தளத்தினை இன்னும் 10 மாதத்தில் மூட இருப்பதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் தளத்தின் பயனர்கள் தரவுகள் திருடு போனதுடன் முதல் கட்டத்தில் 0.9 சதவீதம் வரை சரிந்த நிலையில் சந்தை நேர முடிவில் கிட்டத்தட்ட 1.1 சதவீத சந்தை மதிப்பினை சரிந்தது.
இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் 808 பில்லியன் டாலருக்கு அதிகமாக உள்ள நிலையில் நேற்றைய இந்தத் தகவல் திருட்டுச் செய்திகள் வெளியானதை அடுத்து ஒரே அடியாக 65,000 கோடி ரூபாயினை இழந்துள்ளது. எனினும் இது கூகிளிற்கு பெரிய சறுக்கலாக இருக்காது என் நம்பப்படுகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”