மூடுவிழாக் காணும் கூகிள் பிளஸ்… வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவித்தல்….!
கூகிள் நிறுவனத்தால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாகத் தொடங்கப்பட்ட ஓர் சமூக வலைத்தளமே கூகிள் பிளஸ் ஆகும். ஆனால் கூகிள் தேடு பொறி மற்றும் கூகிள் மெயில் ஆகியன பிரபல்யம் பெற்ற அளவுக்கு கூகிள் பிளஸ் மக்களிடத்தில் பிரபல்யம் அடையவில்லை. இந்நிலையில் கூகிள் பிளஸ் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களில் 5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதால் கூகில் நிறுவனம் அதன் சமூக வலைத்தளமான
கூகிள் பிளசை மூடிவிட முடிவெடுத்திருந்தது. கடந்த வருடமே இம் முடிவு எடுக்கப்பட்ட போதிலும் கூகிள் பிளஸ் சேவையானது தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இந் நிலையில் முன்னர் குறிப்பிட்டபடி வரும் 2 ஆம் திகதி கூகிள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதால் பயனாளர்கள் தமது கணக்குகளில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக சேமித்துக் கொள்ளுமாறு அந் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”