ஜூலை 5ம் திகதி பகலில் வானில் மாயாஜாலம் செய்யப் போகும் சந்திரன்.! எத்தனை மணிக்கு..? யாரெல்லாம் பார்க்கலாம்? இதோ விபரம்…!!
சூரிய கிரகணத்தை தொடர்ந்து இந்த ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணம் இந்த மாதம் 5ம் திகதி வர இருக்கின்றது. சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர்கோட்டில் பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரனில் விழும்போது ஏற்படும் நிலவு மறைப்பே சந்திர கிரகணம் என்று சொல்லப் படுகின்றது.
ஜூலை 5ம் திகதி தோன்றும் இந்த சந்திர கிரகணத்திற்கு பெனும்பிரல் என்றோரு பெயரும் இருக்கிறது. இந்த சந்திரகிரகணத்தை இந்தியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் வாழும் மக்களால் காண முடியாது, குறித்த நாடுகளில் காலை 8.38க்கு அதாவது பகலில் கிரகணம் தொடங்குவதால் பார்க்க முடியாது,
இதான் பெனும்பிரல் அல்லது தெளிவற்ற சந்திர கிரகணம் என கூறப்படுகின்றது. இந்த சந்திர கிரகணமானது சுமார் இரண்டரை மணி நேரம் நீடிக்கும் என கூறப்படுகின்ற அதே நேரம் ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்காவில் இந்த சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும் என கூறப்படுகின்றது.
இது இந்த வருடத்தின் மூன்றாவது சந்திர கிரகணம் என்பது குறிப்பிட தக்கது..!!