இந்த பொடியில் சிறிதளவு உங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் பூசுங்கள், பின் நடக்கும் நம்ப முடியாத மேஜிக்கை பாருங்கள்..!!
பெரும்பாலான பெண்களுக்கு கைகளை, கால்களைக் கவனிப்பதற்கு நேரம் கிடைப்பது இல்லை நேரம் கிடைப்பதில்லை என்பதை விட முக்கியமான விடயம் யாதெனில் அவர்கள் முக அழகிற்காக மினக்கெடும் அளவிற்கு கை, கால்களைப் பராமரிப்பதற்கு முயற்சிப்பதில்லை.நாம் பெரும்பாலான வேலைகளை கையால் செய்வதாலும், கைகளில் நேரடியாக சூரிய ஒளி படுவதாலும் கையினுடைய சருமமமானது முதுமையை வெளிப்படுத்துகிறது.
நம்முடைய கைகளை அழகாக்கி இன்னும் உங்களை இளமையாகக் காட்டிக்கொள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.கடலை மா ட்ரீட்மென்ட், கடலை மாவை கை மற்றும் கால் பாதங்களுக்கும் பயன்படுத்தி சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் பாலை சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும்.
அதனை கை, கால்களில் பூசிவிட்டு சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவி வர வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இவ்வாறு செய்து வந்தால் சரும வறட்சியை தவிர்க்கலாம்.கைகளின் கருமையை நீக்க ட்ரை பண்ணுங்க ,சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருமையான தோல்கள் இருக்கும். இது சருமத்தின் நிறத்துடன் ஒத்துப்போகாமல் காணப்படும். நீங்கள் தொடர்ந்து இந்த பகுதிகளில் எலுமிச்சப்பழ சாறை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
தோல் வறண்டும், சுருக்கம் இருந்தால் ஒலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.கற்றாழையைப் பயன்படுத்தி கைகளை மென்மையாக்குங்கள்,கற்றாழையின் தோலை சீவி விட்டு அதிலிருக்கும் ஜெல்லை கைகள் மற்றும் கால் பாதங்களில் பூச வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இருமுறை இவ்வாறு செய்து வரலாம். கற்றாழை எண்ணெய்யையும் கைகளுக்கு பயன்படுத்தலாம்.
நகங்களைச் சரியான முறையில் வெட்டி பராமரியுங்கள்,நகங்களை வெட்டுவதற்கு முன்னால் நகங்களை மிதமான சூடுள்ள நீரில் சிறிது நேரம் ஊற வைத்து வெட்டுவதனால் மிகவும் எளிமையாக நகங்களை வெட்டலாம். அல்லது தேங்காய் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்து வெட்டினாலும், எளிமையாகவும், பிடித்த வடிவத்திலும் நகங்களை வெட்டலாம்.
கைகளில் வறட்சி உண்டாவதைத் தவிருங்கள்,ஒரு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை கை, கால்களில் தடவிவிட்டு 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும். சரும வறட்சியை தவிர்க்க மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தலாம்.