சிம்புவை காதலித்து பிரிந்த பின் ஹன்சிகா சிம்புவிற்காக போட்ட பதிவு.! இதோ வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான சிம்பு பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அண்மை காலங்கள் சிம்புவிற்கு எதிரானதாக இருந்தது. சரியான நேரத்தில் சூட்டிங்கில் கலந்துகொள்வதில்லை, நடிக்கும் திரைப்படங்களை முடித்துக் கொடுப்பதில்லை என பல குற்றச் சாட்டுகள் எழுந்தது.
அவற்றை சமாளித்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. என்ன இருந்தாலும் சிம்புவிற்கு இல்லாதது என்றால் அது காதல் தான். காதல் வரும் வந்த வேகத்திலேயே போய் விடும்.நயன்தாராவை காதலித்து வந்த சிம்பு அவரை பிரிந்த பின் ஹன்சிகாவை காதலித்து வந்தார். ஆனால் இவர்களின் காதலும் நிலைக்கவில்லை.
சில மாதங்களில் இந்த காதலும் பிரிந்தது. அதன் பின் சிம்பு யாரையும் காதலிக்கவில்லை. ஹன்சிகாவும் தான். காதல் பிரிவின் பின் ஒருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தனர். அதன் பின் மஹா என்ற திரைப்படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாக்கி நடித்து வர இந்த திரைப்படத்தில் சிம்புவும் இணைந்தார்.
தற்போது மஹா திரைப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் நடிகை ஹன்சிகா எல்லோருக்கும் நன்றி கூறியுள்ளார். ஹன்சிகாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளதுடன் சிம்புவிற்கு விஷேடமாக நன்றி கூறியுள்ளார். காதல் பிரிவின் முதல் முதல் சிம்பு பற்றி ஹன்சிகா வெளியிட்ட பதிவு இதுவாகும்.!