சீனாவில் மீண்டும் ஆரம்பிக்குமா.!? “இரண்டாம் அலை ” தடுப்பது கடினம் என எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவர்கள்…!!
சீனா மக்களின் உணவு முறைகள் எம்மை முகம் சுழிக்க வைப்பவையாகும். இன்று உலகையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவின் பிறப்பிடமான சீனா தற்போது அதில் இருந்து மீண்டு விட்டது. புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை, அதே போல் கொரோனா மரணங்களும் நிகழவில்லை.
இந்த நிலையில் சீனாவில் இருந்து இன்னுமொரு வைரஸ் உருவாகி உள்ளது. ஹண்டா (hantavirus ) என்றழைக்கப் படும் வைரஸ் எலிகளில் இருந்து பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எலிகளின் எச்சில், சிறுநீர் போன்றவற்றில் இருந்து தொற்றும் குறித்த வைரஸும் ஆபத்தானது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சீனா தனது பயணத் தடை, உட்பட போடப் பட்டிருந்த அனைத்து தடைகளையும் நீக்கி உள்ளது. இந்த நிலையில் சீனா அரசுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சீனாவில் முழுவதும் இன்னும் கொரோனா ஒழியவில்லை, ஏற்கனவே வைத்தியசாலையில் மக்கள் சிகிச்சையில் உள்ளனர்.
அத்துடன் பயணத் தடையை சீனா நீக்கினால் வெளி நாட்டவர் மீண்டும் வரலாம் இதனால் 2nd வேவ் என்று சொல்லப் படுகின்ற இரண்டாம் அலை உருவாகலாம் என மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை அதாவது மீண்டும் கொரோனா சீனாவில் பரவினால் மக்களை காப்பாற்றுவது மிகக் கடினமானது என மருத்துவர்கள் குழு மேலும் தெரிவித்துள்ளது…!!