மிளகாய் பொடி, அரிவாளுடன் வந்து சினிமா பாணியில் திருமணமான பெண்ணை கடத்திச் சென்ற நபர்கள்.! தமிழகத்தில் நடந்த அதிர வைத்த சம்பவம்.!!!
தமிழகத்தில் சினிமா பாணியில் மிளகாய் பொடி, அரிவாளுடன் வந்து திருமணமான பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பகவதி குமார். இவர் தனது பள்ளிக்கால தோழியான ஹரிபிரியாவை சிறு வயதில் இருந்தே காதலித்து வந்துள்ளார். பள்ளி கல்லூரி என ஒன்றாக படித்த இவர்களின் காதல் 10 வருடங்களுக்கு பின்பு ஹரிபிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.
சாதியை காரணம் காட்டி பகவதி குமாரின் காதலை விட்டு விடும் படி மிரட்டியதுடன் தாழ்ந்த சாதியில் திருமணம் செய்து தர முடியாது என உறுதியாக கூறியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஹரிபிரியா பகவதி குமாரை 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
2 மாதங்களின் பின் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொள்ள மாதம்பட்டி திருமண பதிவு அலுவலத்தில் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் திடீரென அலுவலத்திற்குள் புகுந்த ஹரிபிரியாவின் தந்தை அரிவாளால் ஹரிபிரியாவை வெட்ட முயன்ற போது பகவதி குமார் தடுத்த நிலையில் கை விரல்கள் வெட்டுப் பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பகவதி குமாரின் முகத்தில் மிளகாய் பொடி வீசிய ஹரிபிரியாவின் அண்ணன் மற்றும் உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும் ஹரிபிரியாவை இழுத்துச் சென்றுள்ளனர். திருமண பதிவாளர் அலுவலகத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலீஸார் வந்துள்ளனர். இருப்பினும் ஹரிபிரியாவை அவரது தந்தை கடத்திச் சென்று விட்டார். வழக்கு பதிவு செய்த பொலீஸார் ஹரிபிரியாவை தேடி வருகின்றனர்.!!