மீண்டும் பரபரப்பு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை..! பொக்லைன் இயந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் பணி ஆரம்பம்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 1/2 வயது குழந்தை சுஜித் 29ம் திகதி அதாவது 4 நாள் போராட்டத்தின் பின் சடலமாக மீட்கப் பட்டான்.
இந்த கொடூரம் இனி தமிழ் நாட்டில் நடக்க கூடாது என பயன்பாட்டிற்கு உதவாக ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மூடப் பட்டு வருகிறது, இந்த நிலையில் நேற்று மாலை ஹரியானா ஹர்சிங்புராவில் 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 5 வயது சிறுமி. ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென விழுந்ததை தொடர்ந்து உடனடியாக மீட்பு குழுவுக்கு அறிவிக்கப் பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.
பொக்லைன் இயந்திரம் மூலம் சிறுமியை மீட்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. இந்தியாவில் தொடரும் ஆழ்துளை கிணறு விபத்துகளால் இதுவரை 25திற்கு மேட்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். இதுப்பினும் பெற்றோர் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனைகுறிய விடயமாகும்..!!