ஒருவருக்கு மாரடைப்பு வரபோகிறது என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்து அறிந்துகொள்ளலாம்..! தயவு செய்து அனைவரும் அறிய படித்து பகிருங்கள்..!
உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்களில் மிக கொடுமையானதாக கருதப் படுவது மாரடைப்பு தான். எமக்கு மிகவும் பிடித்த பலரை நாம் எதிர்பாராத விதமாக இந்த மாரடைப்பு எம்மிடம் இருந்து பறித்து சென்று விடுகிறது. இரக்கமே இல்லாத மாரடைப்பு எப்போது வருகிறது.? மாரடைப்பு வரும் முன் வரும் அறிகுறிகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம் : முதலில் எல்லோருக்கும் பொதுவான ஆனால் கண்டுகொள்ளாத அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
இரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தோள் மூட்டு வலி ஏற்படுதல், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் திடீரென வலி ஏற்படும். சில நிமிடங்கள் நீடிக்கும் இந்த வலி பின் இல்லாமல் போய்விடும், நாமும் உணர்ந்துவிட்டு பின் அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம். ஆனால் இது மாரடைப் வர முன் ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று தான். அடுத்து இரவில் சாதாரணமாக இருந்து அதிகாலையில் அதிகமாக வியர்த்தால் சீக்கிரம் மாரடைப்பு ஏற்பட போகிறது என்று அர்த்தமாம்.
அடுத்து தொடர்ந்து தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் ஆபத்து. தூக்கம் வந்து நாம் தூங்காமல் இருப்பது வேறு ஆனால் இரவில் அடிக்கடி விழிப்பது , எவ்வளவு தான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமின்மை ஏற்பட்டால் Sleeping மாத்திரைகளை போட்டு விட்டு சும்மா இருக்காமல் உடனடியாக வைத்தியரை நாடுங்கள். அதே போல் அடிக்கடி நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்பட்டால் சாதாரணமாக விடாதீர்கள். இது மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகள்.
இந்த மெல்லிய நெஞ்சு வலியே அமைதியான மாரடைப்புக்கு காரணமாகது. இந்த வலி ஏற்படும் போது மக்கள் கண்டுகொள்ளாமல் விடும் நிலையில் மிகப் பெரிய ஆபத்தாகி விடுகிறது. அடுத்து இதய துடிப்பில் பிரச்சனை எப்போதும் சாதாரணமாக துடிக்கும் இதயம் படுக்கைக்கு சென்றபின் வேகமாக துடிக்க ஆரம்பித்தால் கவனத்தில் கொள்ளுங்கள் இது ஆபத்து.
இதயம் சீராக இருக்கும் வரையே நாம் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம், இரவில் ஐந்து நிமிடத்திற்கு மேல் இதய துடிப்பு வேகமாக அதாவது சீரற்ற முறையில் துடித்தால் அது மாரடைப்பு வரபோகிறது என்பதை காட்டுகிறது. எனவே உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்…!!