பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரனுக்கு உடனடியாக அடித்த அதிர்ஷ்டம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் விமர்சனங்களை சந்திக்காமல் வெளியேறிய போட்டியாளர் யார் என்றால் இயக்குனர் சேரன் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இயக்குனர் என்ற கர்வத்துடன் நடந்துகொண்ட சேரன் அதன் பின் சாதாரணமாக இருக்க ஆரம்பித்தார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் பல வந்தாலும் தவறு செய்யவில்லை என்பதை நிரூப்பித்தார். ஒரு சில நேரங்களில் சேரனின் நடவடிக்கைகள் மக்களுக்கு கடுப்பை ஏற்படுத்தினாலும் அதன் பின் அதனை சரி செய்து மக்களின் மனதுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டார்.
ஏற்கனவே குறைந்த வாக்குகளால் வெளியேற்றப் பட்ட சேரனுக்கு பிக் பாஸ் இன்னுமொரு வாய்ப்பு வழங்கி ரகசிய அறையில் இருக்க வைத்தது. அதன் பின் மீண்டும் வீட்டிற்குள் வந்த சேரன் சிறந்த முறையில் செயற்பட்டார். டாஸ்குகள் உட்பட அனைத்தையும் சிறப்பாக செய்தார்.
இதனால் இளைஞர்களுக்கு நிகராக பார்க்கப் பட்டார். இடையில் உடல் நலம் குறைபாடு ஏற்பட்டதுடன் வாக்குகளும் குறைவாக கிடைத்தது, இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய தினம் வெளியேற்றப் பட்டார். இந்த நிலையில் வெளியேறிய சேரனுடன் இரண்டு பிரபல தயாரிப்பாளர்கள் சேரனுடன் பேசியுள்ளதுடன்
விஜய் சேதுபதியுடனான திரைப்படத்திதற்கு முன்பே வேறொரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியில் வந்தவுடன் கிடைத்திருப்பது சேரன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது..!