ஜெர்மன் மற்றும் ஜப்பானியர்களின் செலவே இல்லாத சுடு தண்ணீர் மருத்துவம் தெரியுமா.? இதோ உங்களுக்காக அதிகம் பகிருங்கள்..!!
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
இரவு உணவாக பாரம் அல்லது அடர்த்தியான உணவுகளை உட்கொண்டால் மலச்சிக்கல் வருவது வழமை. இதனை தவிர்க்க இது சிறந்த வழி.இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும்.
சிலருக்கு சூடான டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவதும் கூட அந்த அவற்றில் உள்ள வெப்பம் தான் காரணம்.எந்த ஒரு செலவும் இல்லாமல் கிடைக்கக் கூடிய ஒரே மருந்துவம் தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால் ஏகப்பட்ட நோய்கள் தீர்கிறது என்பதை நாம் அறிவோம் அது போல் தான் சுடு நீர் குடிப்பதும்.
அல்சர் உள்ளவர்கள் காலையில் குளிர்ந்த நீர் குடிப்பது போல வயிற்றில் தொப்பை உள்ளவர்கள் காலையில் மிதமான சுடு நீர் குடிக்கலாம். இதனால் வயிற்றுக் கொழுப்பு குறைவதுடன் வயிறு சுத்தமாகிறது.உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிதளவு சுடு தண்ணீர் குடித்தால் சமிபாடு சிறப்பாக இருக்கும்.
மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று குறையும். காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், சமிபாடு சிறப்பாகும்.
சுடு நீர் என்பதற்காக கொதிக்க கொதிக்க குடிக்காமல் மிதமான சூட்டில் குடித்து வர காலையில் சோம்பல் குணம் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் பெரும்பாலும் ஜெர்மன்,மற்றும் ஜப்பானிய மக்கள் சுடு தண்ணீரில் சிறிது இஞ்சி சாறு விட்டு காலையில் அருந்தி அன்றைய நாளை ஆரம்பிக்கின்றனர்.