கணவருக்காக மனைவி எடுத்த அதிரடி முடிவு…! துடிதுடித்து உயிர் பிரிந்த கொடூரம்..!!
அந்த காலத்தில் உடன்கட்டை ஏறுதல் என்ற ஒன்று இருந்ததாக எமது பாட்டி கதைகள் பல கூறி நாம் கேட்டிருப்போம்..இப்போதும் சில காதல்கள் அதனை எமக்கு புரிய வைக்கிறது. சிலர் இது கோழைத்தனம் என கூறினாலும் சிலருக்கு இது வரமாக படுகிறது.
நேற்றைக்கு முந்தினம் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பாலாஜி என்ற இளைஞன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரில் அதிவேகமாக வந்த லொறி மோதி தூக்கி வீசப் பட்டதில் வாகன டயரின் அடியில் தலை சிக்கி கொடூரமாக சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்னுமொரு துயரம் பாலாஜியின் வீட்டில் நடந்துள்ளது. பாலாஜி ரசிதா என்ற பெண்ணை காதலித்து ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பை காட்டியுள்ளனர். பாலாஜி இறந்த செய்தியால் துவண்டு போன ரசிதா தன்னை மறந்த நிலையில் தான் இறுதி சடங்குகளில் கலந்துகொண்டுள்ளார்.
பாலாஜியின் சடலத்தை அடக்கிவிட்டு வந்தவர்கள் அவர்களின் வேலைகளில் மூழ்கி இருக்க நீண்ட நேரம் ரசிதாவை காணவில்லை. எங்கே என தேடியவர்களுக்கு ரசிதாவின் அறை மூடப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அதன் போது தூக்கில் தொங்கிய நிலையில் ரசிதாவின் சடலம் கிடைத்துள்ளது. இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..