யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!
இலங்கையில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்று மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தனர். மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மேலும் அதிகரித்து பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் யாழ்ப்பாணம், களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யும் என கூறப்படுகிறது. இது போன்ற காரணமாக ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.