கட்டிய மனைவி மீது சந்தேகப்படும் கணவர்…!! ஆத்திரம் அடைந்த மனைவியின் கொடூர செயல்…!!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய சப்னாமோல் என்ற இளம் பெண்ணுக்கும், கேரளாவை சேர்ந்த முஜீப்ரகுமான் என்ற இளைஞனுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்ததுள்ளது.
திருமணம் முடிந்ததும் தம்பதியினர் இருவரும் பாலக்காட்டின் வசித்து வந்தனர். இந்த நிலையில் சப்னாமோல் கர்ப்பமடைந்தார். அவருக்கு திருமணமான 4 மாதத்திலேயே, பெண்குழந்தை ஒன்று பிறந்தது. இந்த சம்பவத்தை பார்த்த அதிர்ச்சியடைந்த அவர் கணவர் திருமணம் முடிந்து 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும் என மனைவி மீது சந்தேகப்பட்டார். இதனால் சப்னாமோல் மனமுடைந்து காணப்பட்டார்.
!Advert!
கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தையை தூக்கிக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு சப்னாமோல் வந்துள்ளார். சம்பவ தினம் அன்று, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பேச்சு மூச்சின்றி இருக்கிறது எனவும் சப்னாமோல் தனது பெற்றோரிடம் சொன்னார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் காட்டிய போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அவர் கூறினார்.
!Advert!
ஆனால் குழந்தையின் மரணம் மர்மமாக இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிசார் விசாரித்தனர். அப்போது குழந்தையின் தாய் சப்னாமோல் மீது சந்தேகம் ஏற்பட அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 4 மாதத்தில் குழந்தை எவ்வாறு பிறந்தது என அவர் என் மீது சந்தேகப்பட்டார். அது மட்டுமில்லாமல் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனைகளும் வந்தது.
இதனால் தான் எனது குழந்தையை நானே கொலை செய்தேன் என சப்னாமோல் கூறினார். இதனை தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள். </span