விமான நிலையத்தில் வைத்த பெண் ஒருவரை தலைவணங்கிய இந்திய பிரதமர்…!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!!
இந்தியாவின் விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவரை பிரதமர் நரேந்திர மோடி தலை வணங்கியுள்ளார். அந்த பெண்ணின் முகம் வடிவாக தெரியப்படவில்லை. மேலும் இந்த சமயத்தில் மோடி மற்றும் தொழிலதிபர் அதானியின் மனைவி பிருதி அதானிக்கு தலை வணங்கியுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, அதில் இருக்கும் பெண் யார் என்பது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள Tumakuru நகரில் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினம் அன்று இஸ்ரோவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட மோடி, உணவு பூங்கா திறந்து வைக்க Tumakuru நகரத்தில் தரையிறங்கினார். அந்த வேளையில் அவரை வரவேற்க வந்த Tumakuru நகர மேயர் கீதா ருத்ரேஷ்க்கு மோடி தலைவணங்கி வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
மேலும் இந்த புகைப்படம் அன்றைய செய்திதாள்களிலும் வெளியாகியுள்ளது. எனவே, மோடி பிருதி அதானியின் மனைவிக்கு தலைவணங்குவதாக பரப்பப்பட்டு வந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.