குடும்ப தகராறு காரணத்தால் கட்டிய கணவர் மீது கொதித்த எண்ணெய்யை ஊற்றிய மனைவி…!!!
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தின் மும்பையில் வசாய் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய குயின்சியா மற்றும் அசாமைச் சேர்ந்த 38 வயதுடைய பவிஷ்யா புராஹோகைன் என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அதே பகுதியில் நாயக் என்பவரும் வசித்து வந்துள்ளனர். பவிஷ்யாவின் நண்பராக நாயக், அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக கொண்டார்.
இதனால் பவிஷ்யாவுக்கு மனைவி மீது சந்தேகம் வரத் தொடங்கியது. நாயக்குடன் அவர் தகாத உறவு இருப்பதாக நினைத்தார். இதைத் தொடர்ந்து மனைவியை அடிக்கடி துன்புறுத்தியும் வந்தார். தனக்கும் நாயக்குக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அவர் கணவரிடம் பல தடவைகள் கூறினார். ஆனால் அவர் மனைவியை நம்பவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக குயின்சியாவின் உறவினர்கள் சமாதானம் படுத்தி தம்பதியினரை ஒன்றாக சேர்த்துள்ளனர். பின்னரும் அவருக்கு தன் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் போகவில்லை. இதனால் மீண்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார் . நேற்றைய தினம் இதே சம்பவத்தை முன்னிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை தூக்கிச் சென்று நாயக் உதவியோடு அவரின் கால்களைக் கயிற்றால் கட்டினார்.
பின்னர் கணவரை சுத்தியலால் அடித்தார், அடுக்களையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கண்களில் தூவியுள்ளார். இவ்வாறு செய்தும் குயின்சியாவின் ஆத்திரம் அடங்கவில்லை பின்னர் அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து அவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் கணவர் பவிஷ்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி வந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த மக்கள் நாயக்கையும் குயின்சியாவையும் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பவிஷ்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.